Wednesday, March 7, 2012

ஆபத்தை சந்திக்க போகிறவர்கள் இந்நாட்டின் தமிழர்களா ? அமைச்சர் பாட்டலி சம்பிக்க பயமுறுத்துகிறீர்களா ?

வடக்கு கிழக்கு தமிழர் தலைமையான  தமிழ்   தேசியகூட்டமைப்பு ஐ நா மனித உரிமை கவுன்சிலின்  47  சர்வதேச நாடுகளுக்கு   கடிதம் எழுதியதால் ஆபத்தை சந்திக்க போகிறவர்கள் தமிழர்கள் , எனஅமைச்சர் பாட்டலி சம்பிக்க கூறியிருப்பதை ஜனநாயக மக்கள் முன்னணி   வன்மையாககண்டிக்கின்றது .        இந்நாட்டின் அமைச்சர் பாட்டலி சம்பிக்கரணவக்க இந்நாட்டின் அனைத்து தமிழ் மக்களையும்  பயமுறுத்துகிறாரா ?   தமிழர்கள் நிறையவே சந்தித்துவிட்டோம் ; பல மோசமான திட்டமிட்ட இனக்கலவரங்களை    கண்டது  இந்நாட்டின்  தமிழினம் ,அப்படி ஒருநிலைமையை நம்  நாடு இனியும் தாங்காது என்பதை தேசபிரேமிகள் புரிந்திகொள்ள வேண்டும்

பல மோசமான திட்டமிட்ட இனக்கலவரங்களை    கண்டது  இந்நாட்டின்  தமிழினம் ;   இந்நாட்டின் போரில் குறைந்தது 8000  மக்கள் மாண்டார்கள் என்பது காலம் கடந்து இப்போது  அரசு வெளியிட்டுள்ள தகவல் . இதனை சம்பிக்க அறிவாரா? ? இந்தநாடு சிங்களவர்களுக்கு முன்னரே தமிழருக்கு சொந்தமானது  பல்லினம் வாழும் நாடு என்பதை ஏன் புரிய   மறுக்கின்றீர்கள்;அரசின் பங்காளி கட்ட்சிகளின் இப்படியான நிலைப்பாடுகளை    ஆளும்கட்சி கவனத்தில் கொள்ளவேண்டும்  .இவர்கள் தான் பிரிவினை வாதிகள்  .சிங்கள  இனவாதிகள் பேசினால் தேசபிரேமி ,ஒரு தமிழன்  இப்படி   பேசினால் இனவாதி ;.இனவாதத்தினால் பாராளுமன்ற ஆசனத்தை தக்கவைதுக்கொள்ளவா இனவாதம் பேசுகிறீர்கள் ?  இனவாதிகள் பேசினால் தேசபிரேமி , ;அரசின் பங்காளி கட்ட்சிகளின் இப்படியான நிலைப்பாடுகளை    ஆளும்கட்சி கவனத்தில் கொள்ளவேண்டும்  .இவ் இனவாதிகள் பேசினால் தேசபிரேமி ,ஒரு தமிழன்  இப்படி   பேசினால் இனவாதி;

 போர்க்குற்றம் என்பதே ஒரு பொழுதும் ஒரு நாட்டுக்கு எதிரானது அல்ல என்பதை இவர்கள்  அறிவார்களா .  ஜெனீவாவில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க்ஹா இலங்கை அரசு நல்லிணக்க   ஆணைக்குழு பரிந்துரைகளை   நிறைவேற்றுவோம்   என்று தெரிவிக்கையில்,அமைச்சர் பாட்டலிசம்பிக்கவும்  டாக்டர்  குணதாச அமரசேகரவும் தமது அரச விரோத இன  சௌஜன்ய விரோத கருத்துக்களை   கூறிவருவதையும் இவர்கள்   போன்ற இனவாதிகள் தான்  என்பதைசமாதான விரோதிகள் என்பதையும் அரசாங்கம் புரிந்துகொள்ளவேண்டும்   ,இதை  சமாதானத்தை விரும்பும் சிங்களமக்கள் புரிந்துகொள்வார்கள் .நாடு இன்னொரு இனக்கலவரத்தை சந்திக்க முடியாது.என்பதை தேசபிரேமிகள் புரிந்திகொள்ள வேண்டும் .                 
span.fullpost {display:inline;}

No comments: